போபால்:
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பயணிகள் பேருந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் பலியாகினர்.
மத்தியப்பிரதேசம் மாநிலம் சித்தி பகுதியில் இருந்து சத்னா நகரை நோக்கி 54 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றது. பாட்னா கிராமத்திற்கு அருகே சென்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் இருந்து விலகி அருகில் இருந்த பெரிய கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலால் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர், கால்வாயில் இருந்து 7 பேரை உயிருடன் மீட்டனர். இந்த விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. கால்வாயில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் பயணிகளை வெள்ளம் அடித்துச் சென்றிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. அவர்களை படகுகள் மூலம் மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.